மெய்யியல் பயிற்சி – ஸ்ரீ மயூரநாதர் ஆலயம், டெங்கில் (27.12.2025)

டெங்கில் ஸ்ரீ மயூரநாதர் ஆலயத்தில் மெய்யியல் பயிற்சி – ஆன்மீக எழுச்சி நிகழ்வு
“Innovative Group of Companies” நிறுவனத்தின் “ஆன்மநேய பயணம்” முயற்சியின் ஒரு பகுதியாக, 27.12.2025 அன்று மாலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை டெங்கில், செலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ மயூரநாதர் ஆலயத்தில் மெய்யியல் பயிற்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி,டாக்டர். பி. சுதன் (அத்ம ஞானாலயம்) அவர்களின் ஆன்மீக வழிகாட்டுதலில் நடைபெற்றது.யோகா & வர்ம சிகிச்சை, இயற்கை மருத்துவம், மனித மேம்பாட்டு யோகா ஆகிய துறைகளில் பல்வேறு பட்டங்கள் பெற்ற ஆன்மீக ஆசிரியர்.
மேலும்,திருமதி விஜயலட்சுமி @ ருத்ரம்மா (ஹரித்வார்) அவர்களின் பங்கேற்பும் நிகழ்ச்சியை சிறப்பித்தது.
மெய்யியல் பயிற்சி என்றால் என்ன?
மெய்யியல் பயிற்சி என்பது:
உடல் – மனம் – ஆன்மா ஒருங்கிணைப்பு
சுவாச கட்டுப்பாடு
உள்ளுணர்வு வளர்ச்சி
யோக மற்றும் வர்ம அறிவியல் அடிப்படையிலான ஆன்மீக ஒழுக்கம்
பயன்கள்
✔ மன அமைதி✔ சிந்தனை தெளிவு✔ உள்சக்தி வளர்ச்சி✔ ஆன்மீக விழிப்புணர்வு
இந்த நிகழ்ச்சிக்கு ஆலய நிர்வாகிகள், குருக்கள், பக்தர்கள் மற்றும் ஊர் மக்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.




Comments